சிட் என வந்து உட்கார்ந்தது சிட்டுக் குருவி ஒன்று,
கட்டி இருந்த கொடிக் கம்பி மேல்.
எட்டி ஜன்னல் வழியே நோக்கினேன்,
கட்டித் தங்கம் போல் திளங்கிய மேனி.
வெட்டி வெட்டி பார்வைத் தொடுத்தது சிங்கார சிட்டு.
சுட்டிக் குருவி ஒன்று துணைக்கு அருகு அமர்ந்ததும்
முட்டி எழுந்தது காதல்!
சிட்டுகளுக்குத் தெரியுமா
இன்று உலக குருவிகள் தினம் என்று?!
One Comment on “விஜயலக்ஷ்மி கண்ணன்/சிட்டுக் குருவி”
Comments are closed.
Very nice!