சுரேஷ் ராஜகோபால் /”அடைக்கலம்”

இரு கரம்கூப்பி
உன்னிடம் சரணடைந்தேன்
இதுநாள் வரை செய்த
பிழையாவும் மன்னித்தருள்வீர் 1

இறைவா நீயோ
ஒரு கருணைக் கடல்
உந்தன் நெஞ்சில் நீந்தி
அடைக்கலம் பெறுகிறோம். 2

என்ன பெயர் சொல்லி
உந்தனை வணங்கலாம்
உனக்கு ஆயிரம் திருநாமம்
அதோடு நான் ஐக்கியமாகி விடுகிறேன். 3

காலமெல்லாம் உன்னை
வணங்கியே வாழ்கிறேன்
வாழ்வில் வாழவிடு பின்னர்
என்னைக் கரையேற்றி விட்டுவிடு. 4