தஞ்சாவூர் ஹரணி கவிதை

யாருமற்ற வீட்டில்
சமீபமாக
அம்மா கீழே
விழுந்து விழுந்து
அடிபடுகிறாள்..

தையல் போடும் வரை
வலி தாங்க முடியவில்லை
என்று அலறித் தீர்க்கிறாள்..

எல்லோரும் போனபிறகு
என்னிடத்தில் கைகூப்பி
வேண்டுகிறாள்.

இப்படியெல்லாம் அடிபடக்கூடாது
கீழே விழுந்தோமா
செத்தோமான்னு கிடக்காமப்
போயிடணும்
யாருக்கும் இம்சை கொடுக்காம
என்கிறாள்
அத்தனை இம்சைகளையும்
தாங்கி பெற்று வளர்த்தவள்.