அழகியசிங்கர்/பறவையும் மனிதனும்

ஒரு பறவை
பறந்து செல்கிறது
அது
யாரையையும்
பார்க்கப் போவதில்லை
அதற்கு
எந்த நோக்கமும்
இல்லை

நீ
நடந்து போகிறாய்
யாரையோ
பார்க்கப் போகிறாய்!
உனக்கு
நோக்கம் இருக்கிறது!
சூழ்ச்சி இருக்கிறது!

நீ
மனிதன்
இந்த உலகத்தைப்
புரட்டப் போவதாக
நினைப்பு இருக்கிறது!