தஞ்சாவூர் ஹரணி கவிதை

பெண்ணைக் காக்காத தேசம்
பெருநாசம் கொள்ளும் வீழும்..

பெண்ணைப் போற்றும் யாவரும்
பெரும்புகழ் எய்துவர் திண்ணம்..

தாயினும் உயரியப் பெண்மை
தரணியில் இல்லை உண்மை

கட்டிய தாரத்தினும் மேன்மை
கண்டதும் உண்டோ இல்லை..

பெண்ணைப் பெற்றுப் பெண்ணைப் போற்று
கண்ணைப் போல பெண்ணைப் போற்று

விண்ணை முட்டும் சாதனைகள்
பெண்ணைக் கொண்டு பெருமை செய்

பிறந்த புண்ணியம் பேரும் நீளும்
பிறப்பு முடிந்த பின்னும் வாழும்.