சசிகலா விஸ்வநாதன்/நிறையும், குறையும்

முழுமை ஒரு
அழகு;
முழுமையற்றதும்
அழகே
ஒத்திசைவு ஒரு ஒழுங்கு.
முரணும் ஒரு அழகு.
நிறைவு என்பது, அவரவர் மனம் நுகர்வது;
நிறைவாக இருப்பதில் குறை இருக்கலாம்…
இல்லாமலும் இருக்கலாம்!
இருக்கும் குறையும் மனது அறியாது;
இல்லாக் குறையும்
மனது தேடிக்…
கண்டே தீரும்‌.
குறைவாக இருப்பதிலும்
முழுமை பெற்ற நிறைவுண்டு…
நிறைவான மனத்தினால் நோக்க;
தெரியாமலா சொன்னார்கள்;
நிறை முழுமை,
இறையின் இருப்பு என்று.