சிறகா/மனம்

பனி பொழிந்தாலும்
குளிர் வாட்டினாலும்
மழை பெய்தாலும்
கடும் வெய்யில் சுட்டாலும்
காற்றின் வேகம் கூடினாலும்
பாறை தன் தன்மையில் மாற்றம் கொள்வதில்லை
மலை தன் இருப்பிடத்தில் இருந்து
நகர்வதில்லை
வார்த்தைகளின் வெப்பத்தில்
கருகிய உள்ளம்
பரிசுத்த அன்பின் அரவணைப்பில்
உயிர் பெறும் கணம்
உன்னதம்.