ப.மதியழகன்/பிச்சாடனன்

பிரபஞ்சத்தில் ஒரு
சிறுபகுதி தான் பூமி
அதிலும் மனிதன்
அதில் நெளிந்துகொண்டிருக்கும்
அற்பப்புழு
ஒரு கொசுவால்
எல்லையில்லா வானத்தை
அளந்துவிட முடியுமா?
பிரபஞ்சப் பேரியக்கம்
விதியால் கட்டமைக்கப்பட்டது
இந்த விதியோ
யாருடைய சிபாரிசையும்
ஏற்காதது
மேடை அப்படியே இருக்கும்
கூத்தாடிகள் தான்
மாறி மாறித் தோன்றுவர்
மோட்சம் உங்களை
கவர்ந்து இழுக்கலாம்
அது தருவதாக
இருக்கக் கூடாது
பெறுவதாக இருக்க வேண்டும்
நாம் இறந்தவுடன்
நம்முடன் நம்முடைய
உலகமும் இறந்துவிடும்
உயிர்களிடம்
பிறப்பறுக்கும் வித்தையை
வைத்து விளையாடுகிறான்
பிச்சாடனன்!