ஹரணி கவிதை

இரு சக்கர வாகனத்தைப் பழுதுபார்ப்பதற்குப்
பழுதாளர்கள் இருக்கிறார்கள்
நான்கு சக்கர வாகனத்தைப் பழுது பார்ப்பதற்குப்
பழுதாளர்கள் இருக்கிறார்கள்
தண்ணீரில் ஓடும் கப்பலையும்
வானத்தில் ஓடும் விமானத்தையும்
பழுது பார்ப்பதறகுப்
பழுதாளர்கள் இருக்கிறார்கள்..
உடலின் பழுதைப் பார்ப்பதற்கு
மருத்துவர்கள் இருக்கிறார்கள்
மனத்தின் பழுதைப் பார்ப்பதற்குக்
கடவுள் மட்டுமே இருக்கிறார்
நம்புகிறவர்களுக்கு..
ஆகவே ஒவ்வொரு மனிதனின்
மனத்தின் பழுதிற்கேற்பவும்
பார்ப்பதற்குக் கடவுளே சாட்சியாக
நிற்கிறார்..
ஆக.. குற்றங்குறை காண்பதற்கும்
விமர்சனம் செய்வதற்கும்
வேதனைப்படுவதற்கும்
வசைப்பாடுவதற்கும் யாதொரு
தகுதியுமில்லை எவருக்கும்.