
வசந்த தீபன்
தவ ஞானியாய்
நிமிர்ந்து நின்று…
தரணியாளும் மன்னனாய்
தளும்பும் களிப்பு கொண்டு…
தன்னனடக்கமாய் மெளனித்து…
தவறிழைக்கும்
மனித குலம் கண்டு
தனக்குள் சிரித்தபடி…
கனவுகள் காணும்
இளைய சமூகம் போல்..
மனதுள் புதைந்திருக்கும்
எண்ணங்களை
பசுமை பொங்கும்
காடுகளாய்
பிரதிபலித்து…
வண்ணப்பறவைகள்
வட்டமிடும் வேளைகளில்…
வாசம் கமழும் பூக்களின்
ஆறுதல் தாலாட்டில்…
வானவில் கிரீடம் சூடி
இறுமாந்திருக்கும்
மா… மேருவே…!
உன் அழகை நானும்
எச் சொல்லில் தான்
அடக்கிடுவேன்…?
என்னவென்று தான்
பகர்ந்திடுவேன்…?
எக் காலம் தொடங்கி….
எக்காலம் வரை….
உன் வாழ் காலம்…?
எவர் தான்….?
அறியக் கூடும்.
