சசிகலா விஸ்வநாதன்/தேர்தல் சிந்தனை

மக்கள் தீர்ப்பு; மகேசன் தீர்ப்பு.

அனைத்தும் நமதே
என்ற அன்னையாரும்
தோற்றிட்டார்;
கர்மவீரரும் காணாமல் போனார்;
கவிஞர் அவர்களும்,
அரியாசனம் இழந்தார்.
சின்னங்கள் சிலவும்
சின்னா பின்னமாயின.
கட்சிகள் காணமல் போக; காட்சிகள் மாறின.
எதிரும் புதிருமாய் இருந்தவர்கள்,
ஒரு கோப்பையில் தேநீர் அருந்த;
தேர்தல் களேபரம்;
கலவரம்! சலிப்பு தரும் குழப்பம்!
தலைவர்கள் மந்தி போல்,
இங்கும்,அங்கும் தாவும் வேடிக்கை;
மக்களுக்கு மறதி அதிகம்.
தீர்ப்பை மாற்றி,மாற்றி எழுதுகிறார்கள்.
வருங்கால மன்னர்கள் நினைவிற்கு.

26-3-2024