அழகியசிங்கர்/தண்ணீர்

பல ஆண்டுகளுக்கு
முன்னால்
பக்கெட்டில்
தண்ணீர் பிடித்துவர
நானும் தம்பியும்
பக்கத்துத்
தெருவிற்கு ஓடியிருககிறோம்!
அப்போது
வாடகை ₹ 65 கொடுத்து
வாடகை வீட்டிலிருந்தோம்

திரும்பவும்
தண்ணீர் கஷ்டத்தை
உணர்ந்தது
சொந்த அடுக்ககத்திற்கு
வந்தபோது..
அப்போது காய்ந்துபோன
கிணற்றைப் பார்த்து
கண் கலங்கினேன்
கொஞ்சம் தூற்றல் போட்டால் போதும்
துளிர்த்திடும் கிணறு

இன்று
உலகம் முழுவதும்
இது
ஒரு பிரச்சினை!

இதெற்கெல்லாம்
ஒரே
தீர்வு
கடவுள் மழையைப்
தேவையானபோது
தந்தருள வேண்டும்