மேரி சுரேஷ்/யாரிடம் என்று தான் தெரியவில்லை

எல்லாவற்றையும் உடனுக்குடன்
யாரிடமாவது
பகிர வேண்டும்
யாரிடம் என்று தான் தெரியவில்லை

சொற்க்களைத்தான்
தேட வேண்டியதாகிறது
வரிகளுக்குள்
சரியாக
பொருத்தம் பார்த்து
வார்த்தைகளை
கோர்க்க வேண்டியதாகிறது
மற்றபடி
எழுதுவதில்
சிக்கல் ஒன்றுமில்லை

கடந்த கால
அனுபவங்கள்
நிகழ்கால
நிஜங்கள்
அசைபோட்டு எழுத
ஆயிரம்
இருக்கின்றன

அவள்,இவள்
யாராகினும்
நானாக
மாற வேண்டும்
இல்லையென்றாலும்
வாசிப்பவர்கள்
தானாகவே
எழுதுபவர்களாக
நினைத்து
மாற்றி
வாசிப்பார்கள்

பல நிழல்
பிம்பங்களை
சுமப்பது
அதி பாரமாக
உள்ளது.