பானுமதி/யார் குரல்?

பேச வேண்டும்
யாருடனாவது
எதைப் பற்றியாவது
கேட்கக் காதுகளை
தேடிக் கொண்டிருக்கிறேன்.
திடீரென்று ஒரு சிரிப்பொலி
யார் எனக் கூர்ந்தேன்.
கண்ணுக்கு ப் புலப்படாத ஒரு குரல்
என் செவிகள் திறந்தே இருக்கின்றன
என்னிடம் பேசலாமே என்று சொன்னது
உருவமிலா உன்னுடன்
மனிதனாகிய நான் என்ன பேசுவது
எதிரில் வா பேசுகிறேன் என்றேன்
இன்னும் தவம் செய் வருவேன் என்று மறைந்து விட்டார்.
ஒருக்கால்
கடவுளாக இருக்குமோ அல்லது சாத்தானோ?

One Comment on “பானுமதி/யார் குரல்?”

Comments are closed.