அந்தப் பெண்ணைத் தெருவில் பார்த்தபோது எனக்குத் திகைப்பாகப் போய்விட்டது.
பல ஆண்டுகளுக்கு முன் இறந்து போன என் தங்கையின் சாயலில் இருந்தாள்.
வீட்டிற்கு அழைத்து வந்து சுகன்யாவிடம் காட்ட வேண்டுமென்று நினைத்தேன்.
அவள் மனநிலை சரியில்லாத பெண். கூப்பிட்டால் வருவாளா என்று தெரியாது.
மனோஜ்பவன் ஓட்டல் வாசலில் நின்றிருந்தாள்.
நான் உடனே ஓடிப் போய்
சுகன்யாவை அழைத்து வந்தேன்.
சுகன்யாவும் என் கூற்றை ஆமோதித்தாள்.
அந்தப் பெண் முன் நின்றுகொண்டு, “எங்கள் வீட்டிற்கு வருகிறாயா?” என்று கேட்டாள்.
அவளும் வருகிறேன் என்று கூறியபடி வந தாள்.
எங்களுடன் வரும்போது அவள் ஒன்றும் புரியாத மொழியைப் பேசியபடி வந்தாள்.
வீட்டிற்குள் அழைத்து வந்தவுடன் பாத்ரூம் கொண்டுப் போய் மனநிலை சரியில்லாத அந்தப் பெண்ணை குளிப்பாட்டினாள். பீரோவைத் திறந்து தன் புடவையைக் கொடுத்து கட்டிக்கொள்ள சொன்னாள்.
குளித்துவிட்டு வந்த அவளைப் பார்த்தபோது அசல் என் தங்கை சரசு மாதிரி தெரிந்தாள்.
சரசு என்று கத்தியபடி மயங்கி விழுந்தேன்.
எளிய கதை