விவாதம் செய்யாதீர்கள்
அது உங்களை பலவீனப்படுத்தும்.
சண்டையிடாதீர்கள்
அது உங்களை நிதானமிழக்கச் செய்யும்
கேள்விகள் கேட்காதீர்கள்
அது உங்களை
எதிராளி ஆக்கும்.
தவறுகள் சுட்டாதீர்கள் அது உங்களை
குற்றவாளி ஆக்கும்.
இத்தனையும் தாண்டி நீங்கள் ஒரு கவிதையை நிதானமாக வாசிப்பீர்களானால்
நீங்கள் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறீர்கள்.
தாராபுரம்