காற்றினிலே வரும் கீதம்/விஞ்ஞானி


ஆற்றோர வயல்வெளி
சேற்றிலே நாற்றசைய
கீற்றிலே குடைப்பிடிக்கும்
தென்னையது நிழலிலே

ஊற்றிக்கொள்ளும் அமுது
தொண்டைக்குழி தடத்தை
ஏற்ற இறக்கத்துடன் கடக்க
எழுகின்ற ஒலி அவனுக்கு
காற்றினிலே வரும் கீதம்