சுரேஷ் ராஜகோபால்/”நிலவின் சிரிப்பு”

கரு மேகம் சூழ்ந்த வானம்,
விடாமல் காற்று வீசியது
தோட்டத்தில் செடி கொடிகள்
ஆடி அசைந்து நின்றன. 1

பெரிய மரத்தின்
கிளைகள் காற்றுக்கு அசைந்தன
காய்ந்த இலைகள்
கீழே உதிர்ந்தன. 2

இதுவரை குரல்
கொடுத்த பறவையின்
குரலையே காணோம்
பதுங்கியதோ பயந்ததோ என்னமோ. 3

கருமேகம் கொஞ்சம்
நகர்ந்ததால் வெளியே தெரிந்த
நிலவு மெல்லச் சிரித்தது
சிரிப்பு அமைதியைத் தந்ததே.