வைதேகி/பரவசம்

காலக்கதவை திறந்து பார்த்தால்
எண்ணற்ற கதைகள்
நிஜங்களின் சுவடென
பொக்கிஷமாய் குவிந்திருக்கின்றன.
ஓய்வு நேரப் புரட்டலில்
அவை செழிக்கச் செய்யும்
சிந்தனை நாற்றுகள்
பரவச மகசூலை
அறுவடை செய்கின்றன
தேர்ந்த விவசாயி போல…