ப.மதியழகன்/தேவி

விருட்சம் நடத்தும் சொல்புதிது 24வது இணையகால கவியரங்கம்
நாள்: 28.3.24 தேதி: வியாழன்

ஏதேதோ தோன்றுகிறது
தோன்றுவதையெல்லாம்
பேசிவிட முடிகிறதா என்ன
வார்த்தைகளை மென்று
விழுங்குகிறேன்
கடக்கும் பாதையெல்லாம்
உன் வீட்டிற்கே
கொண்டுபோய் விடுகிறது
காற்றலைகளில்
உனக்குப் பிடித்த
பாடல்களே ஒலிக்கிறது
வானத்து மேகங்கள்
தொட்டாற் சிணுங்கியிடம்
என் விருப்பத்தைச் எடுத்துச் சொல்லுமா
ஆகாயம் அவளிடம்
அத்துமீறுவது மின்னல்
வெளிச்சத்தில் தெரிகிறது
நீ எழுந்தருளினால்
தேர் வடம்பிடித்து
இழுக்காமலேயே நகரும்
இன்னும் இன்னும்
தேவையாய் இருக்கிறது
காதல் தரும் போதை
நீ என்னை
கண்ணுக்குள் சிறைவைத்திருக்கிறாய்
அடிமைகளுக்குக் கூட
இதயமுண்டு என்பதை
நீ மட்டுமே அறிவாய்
காதல் என்னை
என்னமோ செய்துவிட்டது
பசியை மறந்தேன்
துாக்கத்தை மறந்தேன்
ஏன் என்னையே மறந்தேன்
படித்து நான்
பெறமுடியாத கவிஞர்
என்னும் பட்டத்தை
காதல் தான் எனக்குத் தந்தது
தேவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களுக்குத்தான்
காதல் தேடி வரும்
இன்னும் ஒருமுறை
பிறக்க ஆசைதான்
உன் எதிர்வீட்டுக்காரனாய்