கடலூர் ஜெயஸ்ரீ ரகுராமன்/பதைபதைப்பு

29 3 2024 அன்று இணையவழி கவியரங்கில் கடலூர் ஜெயஸ்ரீ ரகுராமன் வாசித்த கவிதை
—+———————-_——————

நான் நின்று கொண்டிருக்கும் இடத்திலிருந்து அந்த வீட்டின் மொட்டை மாடியில் மேல்நிலை தொட்டி தெரிகிறது.
சுற்றிலும் காகக் கூட்டம் சொட்டும் நீர் பருகிட. எனக்கோ பதைபதைப்பு அவர்கள் நீரிறைக்கும் இயந்திரத்தை நிறுத்தி விடக்கூடாதே அல்லது மின்சாரம் நின்று விடக்கூடாதே என்று.