தஞ்சாவூர் ஹரணி/ஓட்டுப் போடுபவன் கூற்று

1.

வாக்குறுதிப் பொய்கள் வாக்குப் பிச்சை
வந்தவுடன் பதவிக்கு வளமான வாழ்வு
மக்களுக்குப் பயனில்லை எப்போதும் சத்தியமே
ஓட்டுப் போடுபவன் கூற்று.


2

விரலொன்று போதும் வாக்காளன் உடலில்
மையிட்டு மயங்கிக் கிடக்க மதுவுண்டு
பிரியாணி பொட்டல த்தில் சொர்க்கம் காண்போம்
ஓட்டுப் போடுபவன் கூற்று.