வைதேகி/வாழத்தெரிகிறது

30 வது இணையகாலக் கவியரங்கம்.


தேர்வு நடைபெறுகிறது.
பிள்ளைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
பள்ளி வளாகம் மௌனத்தை
இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறது.
பாதாம் மரநிழலில்
எதையோ கொறித்தபடி இருக்கிறது
ஓர் அணில்.
வெயில் தகிப்பை அதிகரித்தபடி
மெல்ல மெல்ல நீள்கிறது.
கருணையாய் வீசும் காற்றில்
சருகுகள் இடம் பெயர்கின்றன.
தன்னிருப்பை உணர்த்த
எங்கிருந்தோ கரைகிறது காகம்.
வேடிக்கை பார்த்தபடியிருக்கும் எனக்கும்
நிகழ்காலத்தில் வாழத்தெரிகிறது
நெடுநாட்களுக்குப் பிறகு…..

.