சுரேஷ் ராஜகோபால்/காலை விழிப்பாய்

விருட்சம் சொல் புதிது வழங்கும் இணைய கால 30வது கவியரங்கம், நாள் 08 04 2024 கிழமை திங்கள் நேரம் மாலை 05.10 “காலை விழிப்பாய் ” என்ற எனது கவிதையை படிப்பது சுரேஷ் ராஜகோபால், சிட்லபாக்கம், சென்னை.

கோபம் வேண்டாம்
அது கண்ணை மறைக்கும்
போற்றுவார் போற்றட்டும்
துடைத்து எழு
உனக்காக உந்தன் வாழ்வை
வாழ்ந்து விடு. 1

தாய் தமிழோடு
கண்ணயர்ந்து
இமை நடுவே
கனவு கண்டு
வையம் வெல்ல
காலை கண் விழிப்பாய். 2


சிட்லபாக்கம்.
08 04 2024 மாலை 05.10