அழகியசிங்கர்/தேர்தல் சிந்தனை 4

நீங்கள்
ஒருமுறை
ஓட்டுப்
போட்டவுடன்
எல்லாவற்றையும்
மறந்து விடுங்கள்
யாருக்கு
ஓட்டுப் போட்டோம்
என்று கூட சொல்லாதீர்கள்
யாரும்
உங்களைக் கேட்கப்
போவதில்லை
இது ஒரு கசப்பான
அனுபவம்
என்று நினைத்துக்
கொள்ளுங்கள்
அல்லது
அப்படிக்கூட
நினைத்துக்கொள்ள
வேண்டாம்
அடுத்தநாள் காலையில்
வழக்கம் போல்
மனோஜ்பவன் காப்பி
சாப்பிடுங்கள்
மறந்தும் அரசியல்
பேசாதீர்கள்