
டி.வி.ராதாகிருஷ்ணன்
பழந்தமிழர்கள் அணுவை பற்றி ஆராய்ந்துள்ளனர். ஒவ்வொரு புலவரும்
அணுவைப்பற்றி பலவாராக எழுதி உள்ளனர். ஒவ்வொருவரையும் தத்துவ ஞானிகள்,
விஞ்ஞானிகள் என கூறுதல் பொருத்தமே. சிவனின் அடிப்படை தாத்பர்யமே அணு
என்று சொல்கிறார்கள். அணுவை விளங்கிக்கொள்ள உருவாக்கிய வரைபடம் லிங்க
உருவம் என்று சொல்லுவதும் மிகையில்லை
.
தமிழில் அணுவை குறித்து பல பதங்கள் காணக்கிடைக்கிறது. இதிலிருந்தே அணுவை
பகுத்து பெயரிட்டது விளங்கும். பல வார்தைகள் இருந்தாலும் மூன்று
வார்த்தைகளை எடுத்துக்கொள்வோம் கோண், பரமாணு, இம்மி .
கோண் என்பது மிக நுண்ணிய அளவு. இதை விடச்சிறிய அளவு பரமாணு இதை
விடச்சிறிய அளவு இம்மி.
இப்பிரபஞ்சம் முழுமையும் அணுக்களால் நிரம்பியது என்று அன்றே சொன்னார்கள்.
வெளிப்படையான குறியீடுகளையும் சமன்பாடுகளையும் வகுக்காமல்
விட்டுவிட்டார்கள்.
திருமூலர் எழுதிய திருமந்திரப் பாடல்களிலிருந்து தமிழர்கள் எந்த அளவு அணு
குறித்த ஞானம் உடையவர்கள் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.
அணுவில் அணுவினை, ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறு இட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே
~ திருமந்திரம் (திருமூலர்)
பொருள்:
தவ யோகி தன் உயிரின் அணுவை அதில் மறைந்து இயங்கும் ஆதிப் பிரானின் அணுவை அணுக முயல்கிறான். தன் அக ஆராய்ச்சியில் உயிர் அணுவை தன் நுண் அறிவால் ஆயிரம் கூறு இட்டு துளைத்து ஆராய்ந்து ஆன்மாவில் சிவத்தின் தன்மையை அணுக வல்லமை கொள்கிறான். இங்ஙனம் ஆராய்ச்சி கொண்டவர்க்கு தன் ஆன்ம அணுவில் மூல அணுவோடு அணுகலாம்.
(இதன் சுருக்கமான பொருள் “நுண்மையான சீவனுக்குள்ளேயும், அதி நுண்மையான
அணுவுக்குள்ளும் அணுவாக ஆண்டவன் விளங்குகிறான்”)
–
