சசிகலா விஸ்வநாதன்/வெண்பனி பொழிவு

தண் மலர் மழை இன்று;
கண் நிறை வெண் மலர்
பண்பாடும் மனதிற்கு
தேன் துளி
சந்தம் தரும்
சப்தமின்றி சங்கீதம்
சலியாமல் சிலையென நான் பார்க்கையிலே
சாலை முழுவதும் வெள்ளி விரிப்பு
வண்ண வண்ண மாய் மகிழ் ஊர்திகள்
மென் திரை அலை போல்
மனம் துள்ள கையொலித்து
மகிழ்ந்தேன்;
சிற்றில் கட்டி மகிழும்
சின்னஞ்சிறு சிறுமி போல்.