சுரேஷ் ராஜகோபால்/”ஏன்?”

பெருமழையை ஏற்காத மனம்
உச்சி வெயிலைச் சகிக்காத மனம்
நமது இச்சைக்கு மட்டுமே
இயற்கை உடன்பட
வேண்டுமென எதிர்பார்ப்பு ஏன்?
சகித்து கொள் மனிதா. 1

இயற்கை கட்டுப்பாட்டில்
நாமொரு அங்கம்
வந்து போவது மட்டுமே
நம்முடைய வேலை
சகித்து வாழவேண்டும்
அப்போது புரியும் அதன் வளங்கள். 2