வளவ. துரையன்/விஞ்ஞானக் குட்டிகள்

நேற்றுதான் அந்த நாய்க்குட்டிகளின்
கண்கள் திறந்தன.
இன்று ஒரே கத்தல்.
நானோ அலுவலகம் போக வேண்டும்.
அங்கும் இதே நினைவுதான்.
நான் வரும்வரை அவற்றுக்குப் பாலூட்ட
என் படம் காட்டச் சொன்னேன்.
படம் பார்த்த குட்டிகள் கோபித்துக்
கண்களை மூடிக் கொண்டனவாம்.
கைப்பேசியை அவற்றின் அருகில்
வைத்து அழைக்க அங்குமிங்கும் ஓடின.
அவற்றின் தேவைகளில் அறிவியல் ஒளிந்துள்ளது.
தாய்ப்பாலைவிட நகரும் பொம்மைகளும்
மிரட்டும் சத்தமும்தான் வேண்டுமாம்
இந்த விஞ்ஞானக் குட்டிகளுக்கு