அழகியசிங்கர்/பூதம்

ஒரு புத்தகம்
படித்துக்
கொண்டிருந்தேன்
அதிலிருந்து
ஒருபூதம் கிளம்பி மிரட்டியது
எதாவது எழுது
எதாவது எழுதென்று.

அதைச்
சமாதானப் படுத்துவதற்குள்
போதும் போதுமென்று
ஆகிவிட்டது