சுரேஷ் ராஜகோபால் /”மின்னல்”

இந்த கடுமையான வேனிற் காலத்தில்
சூரியனை மறைத்த மேகக்கூட்டம்
தனக்குள் சண்டை போட்டதன்

விளைவாகப் பெரிய இடியோசை
இம்சை செய்தது, வினாடி
பொழுதில் பளிச்சென்ற

மின்னல் கண்களைக் கூசியது
அதிர்ச்சியை தந்தது
மீண்டபின் பார்த்தேன்

பெருமழை பெய்தது
இடியும் மின்னலும்
நடுவே வந்துபோயின…