வளவ. துரையன் கவிதை

தளர்ச்சி

வளர்ச்சி

தவழ்ந்த ஒரு மகவின்றுத் தலைநிமிர்ந்து தரையில்
தடுமாறி தானாக நடப்பதுதான் வளர்ச்சி
கவலைகளில் உழன்றிருந்த மனமொன்றுக் கவலைக்
கடல்விட்டுக் கரையேறி வாழ்வதுவே வளர்ச்சி
கவலைவழி நீரிறைத்த காலமெல்லாம் ஓடி
கடுகியின்றி மின்சக்தி இறைப்பதுவும் வளர்ச்சி
இவர்சொன்னார் அவர்சொன்னாரர் என்றேற்று வாழ்வில்
ஏமாறும் முறைமாறி ஆராய்தல் வளர்ச்சி