மீனாட்சி சுந்தரமூர்த்தி/விருது

அன்னைத் திருநாட்டின்
மானம்
காத்து வீரம் விளைத்தவர்
பெறுவது
‘பரம்வீர் சக்ரா’
நாட்டின் உயரிய விருது இது.
விலை தந்து
வாங்க முடியாது.
பல நேரம் வெள்ளைச் சேலையின்
கரமே சேரும்.
நாட்டு மக்கள் சொல்லும்
நன்றி இது.

கரைபடாத கரங்களும்,
வஞ்சமிலா
நெஞ்சங்களும் உயிர் தந்து
உடைமை
இழந்து மீட்டெடுத்த
விடுதலை
வேள்வியில் குளிர்
காய்கிறோம்.

விருதொன்று வேண்டுமா
இவரா
அவரா எவரோ சரியில்லை
என்ற
பல்லவி எதற்கு?.

நம் கடமை நாம் உணர்ந்து
மனம்,
சொல்,செயல் பளிங்காக்கி
வகை
தெரிந்து வாழ,
எங்கிருந்தோ ஓர் குரல்
சொல்லும்
‘நல்ல மனிதர்’
இவரென.

உப்புக்கும் பெறாது
ஒப்புக்கு
வாங்குவது விருதல்ல.
இதுவே
விருதென்பேன் நான்.