விஜயலக்ஷ்மி கண்ணன்/சித்திரைப் பெண்

சிறகடித்து பறந்து வருகிறாள் சித்திரைப் பெண்ணழகி.

கதிரவன் ஒளி வீச
கதிர் கண்டு விவசாயி ,

மாக்கோலமிட்ட மேடையில்
மா பலா வாழை என படைக்க,

கனிகளோடு காய்களும் பலவாக வைத்து,

சின்னச் சிங்காரியை வாய் நிறைய அழைத்து

தமிழ் புத்தாண்டை
இரு கை கூப்பி வரவேற்போம்.