வே.கல்யாணகுமார்/சித்திரைப்பெண்


சித்திரைப் பிறந்த நேரத்தில்.. செந்தமிழ் அரங்கில் கூடுகிறோம்! பத்திரை மாற்று பசும்பொன்னே.. எங்கள் பைந்தமிழ்த் தாயே வணங்குகிறோம்!

காலையில் மலர்ந்த புதுமலராய்.. கவிதையில் கனிந்த தேன்சுவையாய்..
நாளைநமதென்னும் நம்பிக்கையை நல்கிட வந்தாய் சித்திரையே!

வான்மறைதந்த குறள் நெறியும்.. வளமார் திராவிடத் திருநாடும். தெய்வத்தமிழ்த் திரு நாடெங்கும் பரவிட அருள்வாய் சித்திரையே!

விழியென மொழியைக் காத்திருப்போம்.. விழுமிய எண்ணத்தில் பூத்திருப்போம் அழகியத் தமிழில் பாட்டிசைத்தே.. அரங்கினில் யாவரும் வணங்க வந்தோம்.!

. பெங்களூரூ.