அழகியசிங்கர்/சண்டை

என்னுடன்
சண்டைக்கு வருகிறார்கள்
நான்
ஒதுங்கிப் போகிறேன்
நான்
யாருடனும் சண்டைக்குப்
போவதில்லை வலிய.
சண்டை
போடுவதில்
திறமை வேண்டும்
சிலருக்குத்தான் அமையும்
சண்டை முடிந்தவுடன்
அதைப் பற்றிய
நினைப்பு இருக்கக் கூடாது
அதைப் பற்றி
நினைத்துக் கொண்டிருந்தால்
சண்டைக்குத்தான் வெற்றி
நாம் தோல்வி அடைந்தவர்களாக
மாறி விடுகிறோம்
மனிதர்களென்றால்
சண்டை
போடாமலிருப்பார்களா?