வானம் முழுவதும் நீலம்
ஏதோவொரு எல்லையில்
நின்றுவிடும் என் பார்வை
கடல் முழுவதும் தண்ணீர்
என் கால்களை நனைப்பதென்னவோ
கொஞ்சம் தான்
பூமி முழுவதும் காற்று
நான் சுவாசிப்பதென்னவோ
அதிலொரு சிறுஅளவு தான்
பிரபஞ்சம் முழுவதும் வெளிச்சம்
எனக்கு தேவைப்படுவதென்னவோ
சிறுகீற்று தான்
வெட்டவெளியெங்கும் மேகங்கள்
எனக்கு நிழல்தருவதென்னவோ
ஏதோவொன்றுதான்
பூமி முழுவதும் மரங்கள்
எனக்கு ஞானம்
தரப்போவது அதில் எதுவோ?
நிலம் முழுவதும் மலர்கள்
என் காதலியின் கூந்தலுக்கு
ஒற்றை ரோஜா போதும்
மண்ணெங்கிலும்
கல்லறைத் தோட்டம்
எனக்கு ஒரு சவப்பெட்டி போதும்!
Arumai sir !