எஸ்ஸார்சி/புதிர்

வாசலில் ஒரு அழகுச்
செம்பருத்தி
அழகாய்ப்பூத்து வந்தது
மலரை நான் கொள்வதில்லை
பாவம் விட்டுவிடுவேன்
நல்ல பதியனாய் வாங்கியதுதான்
வேரில் செம்மண் போட்டு
வளர்த்தேன்
நல்ல நீர் தினமும்
வார்த்தேன்
அவ்வப்போது எருவுமி ட்டேன்
எந்தப் பூச்சியும் அரிக்கவுமில்லை
பின் எப்படித்தான் அது
காய்ந்து‌ போனது திடீரென்று
மலரை நான் கொய்யாதது கோபமோ.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன