அழகியசிங்கரின் சொல் புதிது குழும 44 ஆவது இணையகாலக் கவியரங்கம் – 23/4/24
——-
ஒவ்வொரு தாளைப் புரட்டும்போதும்
உலகம் புரள்கிறது உள்ளத்தில்
அழுகையும் சிரிப்புமாய்
வறுமையும் செழுமையுமாய்
பலவித மனிதர்கள்
பக்கங்களில் தெரிகிறார்கள்
குளுமையும் கோடையுமாய்
விண்ணும் மண்ணுமாய்
இயற்கையின் காட்சிகள்
எத்தனையோ பக்கங்களில்
ஏராள வினாக்களுக்கு
விடைகளும் கிடைக்கலாம்
ஏதோ ஒரு பக்கத்தில் இறைவனும்
தரிசனம் தரலாம்
————