மீனாட்சி சுந்தரமூர்த்தி/தொண்டு

உற்றவர்,பெற்றவருக்குச்
செய்வது
ஆகும் கடமை, இதை உடைமை
ஆக்கியவர்
நடவு செய்தார் அறம்.

கடமைக்கு மனவாசல் திறவாதார்
திறந்து
வைத்தார் ஊருக்கு ஊர்
காப்பகங்கள்.

தொண்டு எனும் பெயர் சூட்டு
விழா
வரிஏய்ப்புப் பெட்டகம் தாங்கி
கோலாகலம்.

ஒருமுகமாம் தனிமுகம்
மறைத்து,
வள்ளலாக வாரி வழங்கும்.
வாய்ப்பு.

வயது வாரி கணக்கெடுப்பு போல்
வகைவகை
நிறுவனங்கள். சமூகச் சீர்கேடு
உலாவ
இட்டுத் தரும் மேடை.

முகமன் இன்றி ஈரநெஞ்சம்பல
எங்கோ
இருந்து காசோலை தரும்.
வாங்கி
வளரும் வியாபாரம்.

எல்லையின்றி எவரிடமும்
காட்டும்
உயிரிரக்கமான ‘தொண்டு’
எனும்
சொல் நிஜம் தொலைத்து
நிழலானது.

மீனாட்சி சுந்தரமூர்த்தி.

இன்று மாலை வாசித்த கவிதை.
தொண்டு .

உற்றவர்,பெற்றவருக்குச்
செய்வது
ஆகும் கடமை, இதை உடைமை
ஆக்கியவர்
நடவு செய்தார் அறம்.

கடமைக்கு மனவாசல் திறவாதார்
திறந்து
வைத்தார் ஊருக்கு ஊர்
காப்பகங்கள்.

தொண்டு எனும் பெயர் சூட்டு
விழா
வரிஏய்ப்புப் பெட்டகம் தாங்கி
கோலாகலம்.

ஒருமுகமாம் தனிமுகம்
மறைத்து,
வள்ளலாக வாரி வழங்கும்.
வாய்ப்பு.

வயது வாரி கணக்கெடுப்பு போல்
வகைவகை
நிறுவனங்கள். சமூகச் சீர்கேடு
உலாவ
இட்டுத் தரும் மேடை.

முகமன் இன்றி ஈரநெஞ்சம்பல
எங்கோ
இருந்து காசோலை தரும்.
வாங்கி
வளரும் வியாபாரம்.

எல்லையின்றி எவரிடமும்
காட்டும்
உயிரிரக்கமான ‘தொண்டு’
எனும்
சொல் நிஜம் தொலைத்து
நிழலானது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன