
நகை அங்காடியில்
அலை மோதும் பாமரன்.
கையில் பணமின்றி
கடனுக்கு நகை வாங்கும் ஏதிலார்.
கஞ்சிக்கும் வழியில்லை; இங்கு.
கனகத்தை மோகிப்பது ஏன்?
அட்சய தினத்தன்று
நன்மையை வளர்க்கலாமே!
ஏழைக்கு உணவிடலாம்.
இல்லார்க்கு ஒரு நூலாடை அளிக்கலாம்.
புதிதாய் ஒன்றை கற்கலாம்; கற்பிக்க லாம்.
நல் கவிதை ஒன்று எழுதலாம்
நல் நூல் ஒன்று படிக்கலாம்
நல் ஆற்றலுடன் நல்லவை விளைவிக்கலாம்.
நல்லவை வளரட்டும்
அல்லவை குறையட்டும்
அட்சய தினம் இன்று
பட்சமாய் நல் எண்ணங்கள் வளரட்டும்.
10-5-2024
