வசுமித்ர கவிதை

அம்மா
அவளுக்குச் சொந்தமாக
ஒரு
கடவுளை
வைத்திருந்தாள்

சந்தோஷமாக
இருந்தால்
எஞ்சாமியென்பாள்
கோபம்
வந்தால்
தூமயக்குடிக்கியென்பாள்

அம்மாவின்
கடவுளுக்கு
சாவே கிடையாது

நீட்ஷேவுக்கு
இது
தெரியவே தெரியாது