சசிகலா விஸ்வநாதன்/அறிந்தவள்

விழித்துப் பார்க்கவில்லை!

விழிக்கின்றேன்; ஏனென்று புரியாமல்

ஏதென்று அறியாமல்

இருக்கும் உன் நிலையறிந்து.

தீபமென ஒளிர்ந்தேன்;

கரம் கூப்ப எவருமில்லை!

பந்தமாய் எரிந்தேன்;

பரிதவிக்க எவருமில்லை!

எவரும் அறியாமல்

இடக்காலால் இடறுகிறாய்.

உயர்த்துகிறாய்; உயர்

தெய்வமாய் ஊர் முன்.

உன் முகம் பார்
ஆடியில்!

பல் முக விகாரம் காட்டுவதால்,

“தலை குனி!”வெட்கியே.

நிமிர்ந்தே என் பார்வை,
இருக்கும் என்றும்.

புரிந்திருந்தாலும்,
புரியாதவள் போல்;

புரியாமல் திரிவதும்
அறியாமல் இருப்பதும், நீரே!