நகுலனின் சுருதி கவிதைகள்

நகுலன்

குரூரம்

ஒருவர்
சாவதும்
ஒருவர்
இருப்பதும்
வெறும் சாவு
என்பதைவிட
இது
மிகவும் குரூரம்
இதைச் சொன்னதும்
சுசீலாதான்.

ஒரு மரம்

அதற்குப்
பல கிளைகள்
ஒரு சொல் தொடர்
அதில் / அதனுள்
பல வளைவுகள்
சில நேர்த்திகள்
ஆழங்கள்
நுணுக்கங்கள்
சப்த விசேஷங்கள்
நிசப்த நிலைகள்
நேரஞ் சென்றது அறியாமல்
அதனுள் நான்.