சசிகலா விஸ்வநாதன்/கண்ணீர் கடலில் மீனவர்கள்

அழகிய சிங்கரின் என்பா

வயிற்றுப் பாடு
ஒன்று இருக்க;

பயம் ஒன்று
அற்றுப் போகும்.

நைந்த வலையானாலும்
லாவகமாய் விரிக்க

கண்ணீர் கடலில் மீனவர்கள்.

உப்புக் கடலோடி
தப்பாமல் வலை

வீசி, ஒப்புக் கொடுத்தேன் அத்தனையும்

தூத்துக்குடி அங்காடியில் கங்காணியிடம் கடனுக்கு

கண்ணீர் கடலில் மீனவர்கள்

🪷
வலை வீசாமல்
வயிறு நிறையுமா?

மலையாய் அலை வந்தாலும் என்ன?

சலிக்காமல் போவோம்; ஆனது ஆகட்டும்

கண்ணீர் கடலில் மீனவர்கள்
🪷