சசிகலா விஸ்வநாதன்/மூவர்ண கொடி

தன்னிகர் அற்ற,
தனிக் கொடி.

பட்டொளி வீசி,
பறக்கும் கொடி.

பளிஞனும் இருளனும்,
பணியும் கொடி

செழுமை காட்டும்
பச்சை வர்ணம்;

உயர்வைச் சுட்டி,
உயர்ந்த கொடி

தூய்மை விளக்கும்
வெண்மை நிறம்;

அமைதி துலங்கும்,
அருட் கொடி

தியாகம் துளங்கும்
காவி நிறம்;

தீரம் செறிந்த,
வீரக் கொடி

தர்மம் விளையும்
மண் இதுவென,

முரசு கொட்டும்
அறக் கொடி.

பாரத தாயின்
மணிக் கொடி;

இதனை, பணிந்தே
போற்றி ஏற்றிடுவோம்.