சசிகலா விஸ்வநாதன்/மகிழ்வுக்கு வானம் எல்லை

முழுநிலவென ஒளிர்கிறது,வாழையிலையில்:

தும்பைப் பூ நிறம்,
பஞ்சுப் பொதியன்ன

ஒரு விள்ளல் கையில் எடுத்து

செவ்வண்ண
சாம்பாரிலும்,
வெண்ணிற சட்னியிலும்,

மாறி மாறி தோய்த்து தின்ன;

இடையே, சுள் என்ற மிளாகாய் பொடியில்

ஒரு விள்ளல், எடுத்துப் புசிக்க;

வயிறு மட்டுமல்ல,
மனமும் நிறைய;

மகிழ்வுக்கு வானம் எல்லை.

One Comment on “சசிகலா விஸ்வநாதன்/மகிழ்வுக்கு வானம் எல்லை”

  1. ஆமாம் மகிழ்வுக்கு வானம் எல்லை, இல்லையில்லை, மகிழ்ச்சிக்கு வானமும் எல்லையில்லை!

    இராம மீனாட்சி சுந்தரம்
    கோயம்புத்தூர்
    17.08.2024

Comments are closed.