
சும்மா சும்மா சும்மா சும்மா
சுற்றாது, சும்மா இருந்தே சொல்
அற, நில்!” என்றே சொன்னாலும்;
அடங்குவது இல்லையே, மனது.
🪷
சும்மா சும்மா சும்மா சும்மா
சுற்றும் மனது,நிலை பெற,
சுகம் தரும்
சொக்கேசன் மலர்
பாதம் சூடுவாய்; நன்னெஞ்சே!
🪷
சும்மா சும்மா சும்மா சும்மா,
என்றே நினைத்து எழுதிய ஓலை
ஒன்று; சுந்தரன் என்ற ஒருவனை
சும்மா வந்து ஆட்கொண்டதுவே.
