தி.சோ. வேணுகோபாலன்/தேரும் மின்விசிறியும்

ஈக்கள் மொய்க்கவில்லை?
கொசுக்கள் கடிக்கவில்லை ?
பூச்சி புழுக்கள் பிடுங்கவில்லை?

கொல்லாமை நோன்பு பூண்ட
முல்லைக்கொடியாள்
கானகம் மணக்கப் பூக்கும்
கடமைக்கு ஏங்க,
காலனுக்குக் கையாளாய்
கூலிக்குக் குருதிகேட்டு
எண்திசையும் கால்நீட்டி
இருக்கும் சிலந்தி

பாரிக்கு நேர்
நீர் ? !

One Comment on “தி.சோ. வேணுகோபாலன்/தேரும் மின்விசிறியும்”

  1. என்னே ஓர் உவமை!

    பாரிக்கு நேர் நீ, முல்லைக்கொடியே!

    எண்திசையும் கால்நீட்டி காலனுக்குக் கையாளாய் சிலந்தி!

    அருமை தி.சோ. வேணுகோபால் வாழ்கவாழ்க நூறாண்டு வாழ்கவே!

    இராமீசு
    07.09.2024

Comments are closed.