
ஒரு தேநீர்குடித்துவிட்டு போ
என்று சொன்னாள்
நான் சந்தித்துவிட்டு திரும்பிய தோழி
தேநீரும் ஒரு தோழி போலத்தான்
இனிப்பு குறைவாகவும்
துவர்ப்பு அதிகமாகவும்
இருக்கிறது என்றேன்
இருந்தாலும் என்ன.
என்று சொல்லிவிட்டு
எனக்குமட்டும் இன்னும்
கொஞ்சம் இனிப்பு சேர்த்தாள்.
இல்லாது போகையில்
சேர்த்துக் கொள்வது
எத்தனை எளிதோ அத்தனை எளிது
இருப்பதைஅப்படியே ஏற்பதும்.
தாராபுரம்
